ஒரு மெய்நிகர்ப் பயணம் மேற்கொள்ளுங்கள்
மெய்ந்நிகர் சுற்றுலாவில் காணப்படும் படங்கள் ஓவியரின் கற்பனையில உருவானவை.
சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் கிழக்குக் கரையாரப் பூந்தோட்டத்தில் ஓர் ஒருங்கிணைந்த காட்சிக்கூட மற்றும் பூந்தோட்ட அனுபவத்தை அளிக்கும்.
சுதந்திர சிங்கப்பூர் எப்படி உருவானது என்பதை நினைவகம் நினைவுகூருவதுடன் நமது தேசத்தின் எதிர்காலத்தை ஒன்றுபட்டு உருவாக்க சிங்கப்பூரர்களுக்கு ஊக்கமளிக்கும்
மன ஊக்கமளிக்க வடிவமைக்கப்பட்டது
சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவக வடிவமைப்பு, சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர்கள் விட்டுச் சென்ற கொடையைத் தேடிச் செல்லும் ஒரு பாதையைச் சித்திரிக்கிறது.
இந்தக் கட்டட அமைப்பு ஒரு சின்னமாக அமைந்திருப்பதற்கு மேலாக, ஒவ்வொரு தலைமுறைச் சிங்கப்பூரர்களுக்கும் ஒரு வாழும் நினைவகமாக இருக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும், நமது தேசத்தின் முக்கிய மைல்கற்களைக் கொண்டாடும் கண்காட்சிக் கூடங்கள் போன்ற இடங்கள் இதில் அமைந்திருக்கும். அதோடு, நமது கடந்த காலத்தை கெளரவித்து எதிர்கால இலட்சியத்தைக் காட்டும் ஒரு காட்சிக் கூடமும் இங்கு இருக்கும். நினைவகம் 2027இல் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இடவ ஓவியரின் கற்பட யில் உருவா டவ. இைப்பபயர்கள் மாற்றத்திற்குரியடவ.


வாகனத்தில் நினைவகத்திற்கு வரும்போது தெரியும் காட்சி

வருகைச் சதுக்கம்

வட்டரங்கத்தின் இரவுத் தோற்றம்

பார்வையிடும் கண்காட்சிக் கூடங்கள்

வருகையாளர் மையம்

இணைப்புக் கட்டடம்
இவை ஓவியரின் கற்பனையில் உருவானவை. இடப்பெயர்கள் மாற்றத்திற்குரியவை.

வாகனத்தில் நினைவகத்திற்கு வரும்போது தெரியும் காட்சி

வருகைச் சதுக்கம்

வட்டரங்கத்தின் இரவுத் தோற்றம்

பார்வையிடும் கண்காட்சிக் கூடங்கள்

வருகையாளர் மையம்

இணைப்புக் கட்டடம்
பூந்தோட்டத்தில் நினைவகம்
இடவ ஓவியரின் கற்பட யில் உருவா டவ. இைப்பபயர்கள் மாற்றத்திற்குரியடவ.
மரீனா நீர்த்தேக்கத்தின் அருகில் மீட்கப்பட்ட நிலப்பரப்பில் நகரின் வான்வெளியை நோக்கி கிழக்குக் கரையோரப் பூந்தோட்டம் அமைந்துள்ளது. அது நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் நில மற்றும் நீர் சார்நத தடைகளைச் சமாளித்து அவர்களின் துணிச்சல் மற்றும் இலட்சியத்தின் வழி உலகிலேயே மிகவும் வாழத்தக்க நகரங்களில் ஒன்றாக சிங்கப்பூரை உருவாக்கியதையும் நாம் எவ்வாறு தொடர்ந்து சவால்களை வாய்ப்புக்களாக மாற்றலாம் என்பதையும் சக்திமிக்க வகையில் பேசுகிறது.
“பூந்தோட்ட நகரம்” மற்றும் “தண்ணீர்” கதை, கடற்கரையோர கிழக்குப்பகுதிப் பெருந்திட்டத்துடன் பின்னப்பட்டுள்ளது. காலப் போக்கில் சிங்கப்பூர் பூந்தோட்ட நகரிலிருந்து இயற்கையில் அமைந்த நகரமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகிறது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சிங்கப்பூரைப் பசுமைப்படுத்துதல் மற்றும் இயற்கையைப் பேணிக்காத்தலுக்கான நமது கடப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பூந்தோட்டம் வழியாக ஓடி மரினா நீர்த்தேக்கத்துடன் இணையும் நீர்நிலைகள் இயற்கைச் சூழலை வலுப்படுத்தி பல்லுயிர்த் தன்மையை மேம்படுத்தும் நீர்வழிகளை உருவாக்குகின்றன.
இவை எல்லாம் தொடங்கியது எப்படி
சிங்கப்பூரர்களால் வடிவமைக்கப்பட்டது